Stories collection

Trying my best to write stories. But will include re-written from the stories that I had come across, which have left a deep foot print in my heart

Thursday, March 23, 2006

ஆபீஸ் முடிந்து அனைவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். அருண் முன்னால் கலா சென்று கொண்டு இருந்தாள்.

முப்பத்தைந்து வயதாகும் கலாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவளுக்கு 2 அக்கா, 1 தங்கை. இவளின் உழைப்பில் தான் அவர்கள் வண்டி ஓடுகிறது. மிகவும் கஷ்டப்பட்டு இரண்டாவது அக்காவையும் கரை ஏற்றி விட்டாள். அடுத்து தங்கைக்கு மணம் முடித்த பின்னர் தான் இவள் கல்யாணம் பற்றி எல்லாம் யோசிக்க வேண்டும்.

அருணுக்கு வயது முப்பத்தி எட்டு. அவனுக்கும் எத்தனையோ இடத்தில் பெண் பார்த்தாகி விட்டது. ஆனால் இவன் ராசி. இவன் பார்க்கும் பெண்களுக்கெல்லாம் இவனை விட பெரிய, நல்ல இடமாக அமைந்து மணமாகி விடுகிறது.

முன்னால் சென்று கொண்டிருந்த கலாவை மெதுவாக அழைத்தான் அருண். என்ன என்பது போல பார்த்தாள் கலா. 'உங்கள பத்தி எனக்கு தெரியும். நீங்க இப்போ உங்க தங்கைக்கு வரன் பார்த்துட்டு இருக்கீங்க இல்ல? நான் வந்து உங்க தங்கைய பெண் பார்க்கறேன். என்னோட ராசிபடி உங்க தங்கைக்கு உடனே நல்ல இடத்துல அமைஞ்சுடும்' என்றான் அருண்.

மெதுவாக அவனை பார்த்து சொன்னாள் கலா - 'சாரி அருண். என் தங்கைக்கு ஏற்க்கனவே இடம் அமஞ்சிடுச்சு. ஆனாலும் நீங்க என் வீட்டுக்கு பெண் பார்க்க வரீங்க'

புரியாமல் பார்த்தான் அருண்.

'என்னை பார்க்க வாங்க' என்றாள் கலா வெட்க்கத்தோடு.

- "இந்த கதையை நான் குமுதம் பத்திரிகையில் படித்தேன். இதில் கதையின் முடிவு மிக அருமை. கலாவிற்கு அருணின் நல்ல மனம் புரிந்து, அவனையே மணம் முடிக்க முடிவு செய்துள்ளாளா?? அல்லது தன்னை பெண் பார்க்க வந்தால் நல்ல இடமாக அமையும் என்ற அழைத்திருக்கிறாளா??"

Monday, February 27, 2006

'அய்யய்யோ' என்று பதறினாள் லதா.
'ஹேய் என்ன ஆச்சு, இருட்டிலே ஏதாவது தப்பு பண்ணிட்டேனா' என்று கண்ணடித்தான் கிரி.
'அடச்சே, விவஸ்தயே இல்லடா உனக்கு. அப்படியெல்லாம் நீ ஏதாவது பண்ண, நான் இனிமே உன் கூட எங்கேயும் வர மாட்டேன்' என்றாள் லதா.
'சரி சரி, கோவப்படாதீங்க மாடம், என்ன ஆச்சு' என்றான் கிரி.
'ம்ம்ம்.. இந்த படத்த பார்க்க எங்க அப்பா வந்து இருக்கார், இப்போ தான் கவனிச்சேன்' என்றாள் லதா.
இப்போது கிரியையும் பதட்டம் தொற்றி கொண்டது.
இதிலெயே புரிந்து இருக்குமே, லதாவும் கிரியும் காதலர்கள் என்று??? அதே... வெகு நாட்கள் கழித்து அவர்கள் ஒரு படம் பார்க்க வந்து இருக்கிறார்கள். அதில் இப்படி ஒரு சிக்கல்.

'அவர் உன்னை பாத்துட்டாரா?' என்று கேட்டான் கிரி.
'பாத்துட்ட மாதிரி தான் இருக்கு' - லதா. 'சரி வா..எப்படியும் படம் முடிய போகுது. நாம இப்பொவே கிளம்பிடுவோம்' என்று கிளம்பினார்கள். ஆனால், அவர்களின் போதாத நேரம், அவர்கள் வண்டி எங்கோ முன்னால் இருந்தது. பின்னாடி நிற்கும் வண்டி எடுத்தால் தான் இவர்களால் வண்டி எடுக்க முடியும். கையை பிசைந்து கொண்டு இருந்தனர் இருவரும். அதற்குள் படம் விட்டு அனைவரும் வந்தனர். லதாவின் அப்பாவும் வந்தார். கிட்ட தட்ட இவர்கள் நிருத்தி இருக்கும் வண்டியின் அருகில் அவர் வண்டியும் இருந்தது. 'போச்சு.. இன்னிக்கு சத்தியமா மாட்டினோம்' என புலம்ப ஆரம்பித்தாள்.

வண்டியில் இருவரும் மௌனமாக வந்தனர். வீட்டினருகில் இறங்கியதும் பார்த்தால், அப்பா அவர்களுக்கு முன்னலேயே வீடு வந்து சேர்ந்தார். உடனே கிரி சொன்னான் - 'லதா, பயப்படாதே. ரொம்ப ப்ராப்ளம் ஆச்சுனா, விஷயத்த சொல்லிடு. நான் இங்கயே இருக்கேன். கொஞ்ச நேரம் நிக்கறேன். எந்த ப்ராப்ளமுமில்லனா, மாடிக்கு வந்து டாடா சொல்லு, நான் நிம்மதியா வீட்டுக்கு போறேன். ஆல் த பெஸ்ட்'

லதாவும் கடவுளை வேண்டியபடியே வீட்டினுள் சென்றாள். ஆனால், அங்கே அவள் அப்பா அம்மாவிடம் சகஜமாக பேசி கொண்டு இருந்தார். சினிமா போய் வந்த கதையையும் சொல்லி கொண்டு இருந்தார். ஆனால், லதாவை பார்த்த மாதிரியே தெரியவில்லை. லதா வந்ததை கவனித்தும் ஒன்றும் பெரிதாக முகம் மாறவில்லை. நிம்மதி ஆனாள் லதா. சந்தேஷமாய் குதித்தவாரே மாடிக்கு சென்று கிரியை பார்த்து கை அசைத்தாள். கிரியும் நிம்மதி அடைந்தான்.
அப்போது திடீரென மாடிக்கு வந்த லதாவின் அப்பா, மகள் எவனையோ பார்த்து கை அசைத்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தார். வேகமாய் போய், லதாவின் கன்னத்தில் 'பள்ள்ள்ளார்...'

Friday, February 24, 2006


அவர் ஒரு தேர்ந்த கை ஜோதிடர். பலரும் அவரிடம் கை ஜோசியம் பார்த்து பயனடைந்துள்ளனர். ஆனால் அவர் அதை ஒரு பொழுது போக்காக தான் செய்கிறார். யாருடைய கையையாவது பார்த்து விட்டால் அவருக்கு 'குறு குறு' என்றாகி விடும். உடனே ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விடுவார். எங்காவது கூட்டம் கூடி இருந்தால் அவர் பாடு கொண்டாட்டம் தான். மற்றவர்களின் கைகளை பார்த்து கொண்டே நேரத்தை போக்கி விடுவார். ஆனால் அவருடைய கை பற்றி யாரிடமும் எதுவும் சொன்னதில்லை.

அன்றும் அப்படி தான். ஒரு அவசர வேலையாக பஸ்ஸில் ஏறினார். கூட்டம் அவ்வளவாக இல்லை. அவருக்கு ஜன்னலோர இருக்கை கிடைத்தது. அவர் அருகில் ஒரு பெரியவர் வந்து அமர்ந்தார். நம்மவர் வழக்கம் போல அவருடைய கை ரேகையை ஆராய்ச்சி செய்ய ஆரம்ப்பித்தார். ஆனால் அதிக நேரம் அந்த பெரியவர் இருக்கவில்லை. அடுத்த நிருத்தத்திலேயே இறங்கி விட்டார். 'அட சே' என்றாகி விட்டது நம்மவருக்கு. 'ம்ம்.. அடுத்து ஒருவன் வராமலா போய் விடுவான்' என்று சமாதானம் அடைந்தார். ஒரு இளைஞன் வந்தான். நம்மவர் அவர் கையை பார்க்க ஆரம்பித்தார். 'ம்ம்.. பரவாயில்லை.. இந்த பையனின் கை நன்றாகவே இருக்கிறது' என்று எண்ணினார். பார்த்து கொண்டே இருந்தவர் திகைத்தார். 'அடடா.. இவன் ஆயுள் மிக குறைவாக உள்ளதே.. இன்னும் 2 அல்லது 3 மாதங்கள் உயிரோடு இருந்தால் பெரிது. இதை இவனிடம் சொல்லி எச்சரிக்கை செய்யலாமா, அல்லது..' என்று யோசித்து கொண்டே இருந்தார்.

சிறிது நேரம் யோசித்த பின் 'சொல்லி விடுவது' என தீர்மானித்து, அவன் பக்கம் திரும்ப எத்தனித்தார். அப்போது எங்கிருந்தோ ஒரு லாரி வெகு வேகமாக அந்த பஸ்ஸை நோக்கி வந்தது. ஓட்டுநர் அதை தவிர்க்கும் விதமாக பஸ்ஸை ஒடித்தார். லாரி ஜோதிடர் இருந்த இருக்கையை உரசியது. அதிர்ச்சியில் 'ஹார்ட் அட்டாக்' வந்து பரிதாபமாக உயிர் இழந்தார் ஜோதிடர். அவர் அருகில் இருந்தவன், வண்டியை ஆஸ்ப்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கெஞ்சி கொண்டு இருந்தான்.

Thursday, February 23, 2006


Hema is in love with someone. that could be seen very obviously by her parents. but unlike the usual parents they wanted to be kind enough to their daughter.
that evening, her mom asked her "Hema, are you in love with someone".
Hema was taken back... "mom... that is... "
"thats ok dear, i understand! you can be open with me".
"well mom.. actually.. well, how did you guess it?"
"I saw a book that was signed as 'with love - Vineeth' and also a greeting card"
Hema blushed and mom could see it
"ok, tell me the details..."
"you know Vineeth very well, Mom"
"what, but I am afraid I have never heard that name from you"
"oh Mom!! you have..."
"Dear I suppose I know all your friends and I am sure you dont have anyone named Vineeth"
"no Mom! this is Vineetha.. my close friend"
Mother got shocked.. "What?????"
"Yes Mom! I am in love with Vineetha and have decided marry her"
Mother fainted!
after all it is still India, my dear Hema!!